செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண் கைது
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பின்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த அவரை திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்போரூரை அடுத்த சிறுங்குன்றம் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் ரூ.50 மதிப்புள்ள 1½ கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.