செய்திகள்
விபத்து

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அக்காள்-தம்பி பலி

Published On 2019-09-04 12:09 IST   |   Update On 2019-09-04 12:09:00 IST
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த தாட்சாயினி (32). இவரது தம்பி பகவதி (20). அக்காள்-தம்பி இருவரும் செய்யூர் அடுத்த தழுதாளி குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் பைக்கில் சென்றனர்.

நேற்று இரவு வீடு திரும்பினர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மழை பெய்தது.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர சுவற்றில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பகவதி தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாட்சாயிணி மாமல்லபுரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தம்புநாயுடுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு(45). தொழிலாளி.

இவர் பெரியபாளையம் நோக்கி தண்டலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தண்டலம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பெரியபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிராக்டரின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் டிராக்டரின் பின்பக்கம் ஹரிபாபுவின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்,பலத்த காயமடைந்த ஹரிபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.

Similar News