செய்திகள்
கைது

பொதுமக்களுக்கு இடையூறு - பவானி வாலிபர் கைது

Published On 2019-08-28 09:49 GMT   |   Update On 2019-08-28 09:49 GMT
பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பவானி:

பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் மாது. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் மாதுவை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி அப்பகுதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக பவானி போலீஸ் நிலையத்தில் மாது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பவானி, மேற்கு தெரு பகுதியில் வசிக்கும் பிரபு என்கிற பிரபாகரன் வயது (27) என்ற நபரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News