செய்திகள்
விஷம்

ஈரோடு திண்டலில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

Published On 2019-08-28 09:43 GMT   |   Update On 2019-08-28 09:43 GMT
ஈரோடு அடுத்த திண்டலில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த திண்டல் வள்ளிபுரத்தான் பாளையம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மனைவி மல்லிகா (வயது 58). இவர் அவரது மகன் கார்த்தியுடன் (38) வசித்து வருகிறார்.

மல்லிகாவின் கணவர் சவுந்திரராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மல்லிகா கணவன் இறந்த துக்கத்தால் மன வேதனையுடன் மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் மல்லிகா திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மல்லிகாவை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மல்லிகா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News