எலக்ட்ரிஷியனை கரம் பிடித்த கல்லூரி மாணவி - போலீசில் தஞ்சம்
சென்னிமலை, ஆக.27-
சென்னிமலை அருகே கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 25). 10-ம் வகுப்பு வரை படித்த இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார்.
சென்னிமலை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவருடைய மகள் சவிதா (19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊர் என்பதால் கடந்த ஒரு வருடமாக பிரகாசிக்கும் கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர் வீட்டி லும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டை விட்டு கிளம்பிய காதல்ஜோடி நேற்று முன்தினம் மேட்டூர் அணை அருகே உள்ள கொளத்தூரில் ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு இருவரும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சவீதா வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பிரகாஷின் பெற் றோர் இந்த திருமணத்தை ஏற்று கொண்டதால் பிர காஷின் பெற்றோர் இரு வரை யும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.