செய்திகள்
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ தெற்னுகு ரெயில்வே மின் பாதையில் உயர் அழுத்த மின் புதை வடம் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஈரோடு பெரியார் நகர், பட்டேல் வீதி, எஸ்கே.சி. ரோடு, சிதம்பரம் காலனி மற்றும் பெரியார் நகர் ஹவுசிங் போர்டு முழுவதும்.
இந்த தகவலை ஈரோடு நகரியம் செயற் பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.