செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல்

Published On 2019-08-26 09:35 GMT   |   Update On 2019-08-26 09:35 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதை பொருள் மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு 25 பண்டல் வளையல் அனுப்புவதற்காக இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த பார்சல் அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 110 கிலோ எடையுள்ள இந்த போதை பொருள் கருப்பு கலர் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.

இந்த போதை பொருள் சென்னையில் இருந்து இலங்கைக்கு யார் அனுப்பியது என்ற தகவல்களை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல கோலாலம் பூரில் இருந்த சென்னை வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியிடம் 7 கிலோ தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News