செய்திகள்
குமரி அனந்தன்

பூரண மதுவிலக்கு கோரி 15ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் - குமரி அனந்தன் பேட்டி

Published On 2019-08-26 03:40 GMT   |   Update On 2019-08-26 03:40 GMT
பூரண மதுவிலக்கு கோரி அடுத்த மாதம் 15-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காந்திய பேரவை இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என குமரி அனந்தன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:

காந்திய பேரவை இயக்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பிறந்ததினமான செப்டம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, திருக்குறளின் வழிகாட்டுதல்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரது பெயரை கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி, வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News