செய்திகள்
கைது

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.47 ஆயிரம் திருட்டு - 3 பேர் கைது

Published On 2019-08-23 10:29 GMT   |   Update On 2019-08-23 10:29 GMT
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.47 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது25). வியாபாரி. சம்பவத்தன்று அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்தில் வசூலான ரூ .47 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரூ.47 ஆயிரம் பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் யாரோ பணப்பையை திருடிக் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அய்யப்பன் டவுன் போலீசில் புகார் செய்தார்.

தனது கடையில் வேலை பார்த்து வரும் ரங்கம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் மட்டும் பிரகாஷ் என்பவர்கள் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து டவுன் போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவிலைச் சேர்ந்த பாலகுமார் என்பவருடன் சேர்ந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News