செய்திகள்
ஈரோடு சூரம்பட்டியில் வீட்டில் தூங்கிய மாணவி திடீர் மாயம்
ஈரோடு சூரம்பட்டியில் வீட்டில் தூங்கிய மாணவி திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி சாஸ்திரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேனாதிபதி இவரது மகள் மேத்தா ஸ்ரீ (வயது 16). வெப்படையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு மேத்தா ஸ்ரீ தனது குடும்பத்துடன் தூங்கினார். 18 ஆம் தேதி காலை சேனாதிபதி எழுந்து பார்த்த போது தனது மகள் மேத்தா ஸ்ரீ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை .
இதுகுறித்து சேனாதிபதி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.