செய்திகள்
மழை

கடலூரில் இன்று பரவலாக மழை

Published On 2019-08-20 04:23 GMT   |   Update On 2019-08-20 04:23 GMT
கடலூர் மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரத்தில் விடிய விடிய மழையும் பெய்து வருகிறது.

கடலூர்:

கடலூர், திருப்பாதிரிபுலியூர், முதுநகர், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, கோண்டூர் உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர வட்டார பகுதியில் ஒரே நாள் இரவில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பண்ருட்டி பகுதியில் 50 மி.மீ. பெய்து உள்ளது.

இன்று அதிகாலை கடலூர் நகர் பகுதியில் மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியில் மழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில உற்பத்தி ஆகிறது. எனவே நகராட்சி சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தடுப்பணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News