செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள மேலகுமிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்குமுத்து(வயது 36), ஆண்டி(50), இருளன்(28). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்திற்கு மரம் வெட்டும் வேலைக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் இருவேறு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். சங்குமுத்து மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இருளன், ஆண்டி மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர். அவர்கள் இளையான்குடி இந்திராநகர் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற சங்குமுத்துவின் மோட்டார் சைக்கிளும், பின்னால் வந்த இருளன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்து 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருளன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே உள்ள மேலகுமிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்குமுத்து(வயது 36), ஆண்டி(50), இருளன்(28). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்திற்கு மரம் வெட்டும் வேலைக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் இருவேறு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். சங்குமுத்து மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இருளன், ஆண்டி மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர். அவர்கள் இளையான்குடி இந்திராநகர் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற சங்குமுத்துவின் மோட்டார் சைக்கிளும், பின்னால் வந்த இருளன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்து 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருளன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.