செய்திகள்
ஸ்டவ் வெடிப்பு

ஸ்டவ் வெடித்ததில் பெண் படுகாயம்

Published On 2019-08-07 10:22 GMT   |   Update On 2019-08-07 10:22 GMT
ஈரோடு அருகே ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்ததில் பெண் படுகாயமடைந்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு முத்தம்பாளையம், ஹவுங் யுனிட், அண்ணாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது48) . கணவன் மனைவி இருவரும் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு விஜயலட்சுமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து விஜயலட்சுமி தீயில் கருகினார்.

பின்னர் விஜயலட்சுமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News