செய்திகள்
விபத்து

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பெயிண்டர் பலி

Published On 2019-08-06 10:28 GMT   |   Update On 2019-08-06 10:28 GMT
பெருந்துறையை அடுத்துள்ள சேனடோரியம் அருகே பின்னால் வந்த பைக் மோதி பைக்கில் சென்ற பெயிண்ட் வேலை பார்க்கும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள மேக்கூர் முதலியார் வீதி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 59). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த வேலையாக சீனாபுரம் செல்வதற்காக தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் சேனடோரியத்தை அடுத்துள்ள மேம்பாலம் பகுதியில் சென்றார்.

அப்போது இவருக்கு பின்னால் சுள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுதேவன் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வந்த பைக் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த செல்வராஜின் பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செல்வராஜ் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News