செய்திகள்
கஞ்சா கடத்தல்

பு.புளியம்பட்டி அருகே கஞ்சா விற்ற மாமியார்- மருமகள் கைது

Published On 2019-08-06 10:13 GMT   |   Update On 2019-08-06 10:13 GMT
பு.புளியம்பட்டி அருகே கஞ்சா விற்ற மாமியார்- மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிகுட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அங்கு கஞ்சாவுடன் இருந்த 2 பெண்களை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள் பெயர் கண்ணம்மாள் (வயது 55), ராஜாமணி (வயது 42) என தெரிந்தது. இருவரும் மாமியார் - மருமகள் ஆவர்.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 160 கிராம் கஞ்சாவும் 1 லட்சத்து 770 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News