ஈரோட்டில் குடும்ப தகராறில் புகைப்பட கலைஞர் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு அடுத்த சூளை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 33. திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அந்தப் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் கோபித்துக் கொண்டு அந்தப் பெண் அன்னை சத்யா நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சதீஷ் குமார் மனவேதனையில் இருந்துள்ளார். தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதிஷ்குமார் இன்று மதியம் பரிதாபமாக இறந்தார். இது வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.