செய்திகள்
யானைகளை படத்தில் காணலாம்.

ஆசனூர் அருகே ரோட்டை மறைத்து நின்ற காட்டு யானைகள்

Published On 2019-08-03 12:33 GMT   |   Update On 2019-08-03 12:33 GMT
ஆசனூர் அருகே காட்டு யானைகள் ரோட்டை மறைத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர் மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, வனப் பகுதியில் போதிய மழை இல்லாததால் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றன. அப்போது சில சமயங்களில் யானைகள் ரோட்டுக்கு வந்து ரோட்டை மறித்து நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சென்ற பிறகு செல்கிறார்கள். இதன் காரணமாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அடர்ந்த வனப் பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த ரோடு வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆசனூர் அருகே குட்டியுடன் நேற்று காட்டு யானைகள் திடீரென சாலையை வழி மறைத்து அங்கு உள்ள மரக்கிளைகளை உடைத்து தின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட் டன.

அந்த யானைகள் நீண்ட நேரம் ரோட்டில் உலா வந்தது. ரோட்டை மறித்து நின்ற யானைகள் தானகவே வனப்பகுதிகுள் சென்றது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News