செய்திகள்
பெண் குழந்தை இறந்த துக்கம்- தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள வெங்கமேட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). இவர் ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது முதல் மனைவி பெயர் சாந்தி (வயது 35). திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.
இதனால் தனது அத்தை மகள் உமா மகேஸ்வரியை அவர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வடிவேல் வீட்டில் கதவை பூட்டி கொண்ட தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பொருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.