செய்திகள்
கோபி அருகே பள்ளி மாணவி திடீர் மாயம்- போலீசார் விசாரணை
கோபி அருகே வீட்டில் இருந்த பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் ஹரிராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடப்பதால் மாணவி பள்ளிக்கு போகவில்லை. வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் வெளியே போய் வந்த அவரது தாயார் வீட்டில் இருந்த மகளை காணாதது கண்டு திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் தாயார் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.
கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் ஹரிராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடப்பதால் மாணவி பள்ளிக்கு போகவில்லை. வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் வெளியே போய் வந்த அவரது தாயார் வீட்டில் இருந்த மகளை காணாதது கண்டு திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் தாயார் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.