செய்திகள்
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக முடியாது: வேலூரில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது என்பது மக்கள் தீர்ப்பாக உள்ளது என்று வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.ப ன்னீர் செல்வம் பேசினார்.
வேலூர்:
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார்.
2-வது நாளான நேற்றிரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
ஈ.வெ.ரா, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருங்கிணைந்த குணம் கொண்டவர் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் வகுத்த சதித்திட்டங்களை முறியடித்தவர் ஜெயலலிதா.
அவர் வழியில் தொண்டர்களாக இருந்து இந்த ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். தி.மு.க. கட்சியில் தொண்டர் யாராவது கட்சியின் தலைவர், முதல் அமைச்சர் ஆக முடியுமா?
இந்நிலையில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்துவிடும். மாநிலத்தில் ஆட்சி முடிந்துவிடும். நாம் முதல் அமைச்சராகி விடுவோம் என்று பகல் கனவு கண்டு வந்தார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
பொய்யாக சொல்லி மக்களை ஏமாற்றி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றி தற்காலிகமானது, நிரந்தரமில்லை. மற்றவர்களை பற்றி குறைசொல்வதற்கு முன்பு, ஸ்டாலின் உங்கள் முதுகை திரும்பி பாருங்கள், எவ்வளவு அழுக்கு உள்ளது என்று, எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது என்பது மக்கள் தீர்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வீரமணி, கருப்பண்ணன், நடராஜன் மற்றும் சட்டமன்ற துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் விஜய், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பேரணாம்பட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
28 ஆண்டுகள் ஒரு இயக்கம் தமிழகத்தை ஆண்டது என்றால் அது அ.தி.மு.க.தான். இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றியை கொடுத்து தமிழகத்தை ஆள தகுதியான கட்சி அ.தி.மு.க.தான் என நிரூபித்து வருகின்றனர். தமிழக மக்கள். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது இந்த இயக்கம்.
ரூ.28 ஆயிரம் கோடி நிதி உபயோகப்படுத்தாமல் திரும்பி சென்றதாக ஸ்டாலின் தமிழக அரசு மீது குறைகூறி வருகிறார். 2010ல் இவரது அப்பா தமிழக முதல் அமைச்சராக இருந்தபோது இதேபோல், ரூ.8 ஆயிரத்து 718 கோடி திரும்ப சென்றது.
இந்த பணம் முடிக்கப்படாமல் செய்து கொண்டுள்ள பணிகளுக்கான பணம் மீண்டும் திரும்பி வந்துவிடும். இதை தெரிந்து இருந்தும் ஸ்டாலின் குழப்புகிறார்.
5 ஆண்டுகள் மின் பிரச்சனையை தீர்க்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தவர்கள் இவர்கள். ஜெயலலிதா பதவியேற்று 2 ஆண்டில் பிரச்சனையை தீர்த்து வெளி மாநிலங்களுக்கு மீதி மின்சாரத்தை கொடுத்தார். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க.வின் ஆட்சி எப்போதுமே அராஜக ஆட்சி தான் என மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. எனவே தமிழகத்தை ஒருபோதும் தி.மு.க. ஆள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார்.
2-வது நாளான நேற்றிரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
ஈ.வெ.ரா, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருங்கிணைந்த குணம் கொண்டவர் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் வகுத்த சதித்திட்டங்களை முறியடித்தவர் ஜெயலலிதா.
அவர் வழியில் தொண்டர்களாக இருந்து இந்த ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். தி.மு.க. கட்சியில் தொண்டர் யாராவது கட்சியின் தலைவர், முதல் அமைச்சர் ஆக முடியுமா?
இந்நிலையில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்துவிடும். மாநிலத்தில் ஆட்சி முடிந்துவிடும். நாம் முதல் அமைச்சராகி விடுவோம் என்று பகல் கனவு கண்டு வந்தார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
பொய்யாக சொல்லி மக்களை ஏமாற்றி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றி தற்காலிகமானது, நிரந்தரமில்லை. மற்றவர்களை பற்றி குறைசொல்வதற்கு முன்பு, ஸ்டாலின் உங்கள் முதுகை திரும்பி பாருங்கள், எவ்வளவு அழுக்கு உள்ளது என்று, எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது என்பது மக்கள் தீர்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வீரமணி, கருப்பண்ணன், நடராஜன் மற்றும் சட்டமன்ற துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் விஜய், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பேரணாம்பட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
28 ஆண்டுகள் ஒரு இயக்கம் தமிழகத்தை ஆண்டது என்றால் அது அ.தி.மு.க.தான். இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றியை கொடுத்து தமிழகத்தை ஆள தகுதியான கட்சி அ.தி.மு.க.தான் என நிரூபித்து வருகின்றனர். தமிழக மக்கள். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது இந்த இயக்கம்.
ரூ.28 ஆயிரம் கோடி நிதி உபயோகப்படுத்தாமல் திரும்பி சென்றதாக ஸ்டாலின் தமிழக அரசு மீது குறைகூறி வருகிறார். 2010ல் இவரது அப்பா தமிழக முதல் அமைச்சராக இருந்தபோது இதேபோல், ரூ.8 ஆயிரத்து 718 கோடி திரும்ப சென்றது.
இந்த பணம் முடிக்கப்படாமல் செய்து கொண்டுள்ள பணிகளுக்கான பணம் மீண்டும் திரும்பி வந்துவிடும். இதை தெரிந்து இருந்தும் ஸ்டாலின் குழப்புகிறார்.
5 ஆண்டுகள் மின் பிரச்சனையை தீர்க்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தவர்கள் இவர்கள். ஜெயலலிதா பதவியேற்று 2 ஆண்டில் பிரச்சனையை தீர்த்து வெளி மாநிலங்களுக்கு மீதி மின்சாரத்தை கொடுத்தார். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க.வின் ஆட்சி எப்போதுமே அராஜக ஆட்சி தான் என மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. எனவே தமிழகத்தை ஒருபோதும் தி.மு.க. ஆள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.