செய்திகள்
பலி

பண்ருட்டியில் வி‌ஷ வண்டு கடித்து பெண் பலி

Published On 2019-07-25 10:19 GMT   |   Update On 2019-07-25 10:19 GMT
பண்ருட்டியில் வி‌ஷ வண்டு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி பாரதி நகர் சேர்ந்தவர் மணி (60). இவரது மனைவி மல்லிகா (52). இவரது வீட்டின் தோட்டத்தை சுத்தப்படுத்தம்போது அங்கிருந்த வி‌ஷ வண்டு மல்லிகாவை கடித்தது. அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்து விட்டார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News