செய்திகள்
சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம், பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆரோக்கியராஜ்.
இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தற்போது ஆரோக்கிய ராஜ் மதுராந்தகம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின்ராஜாசிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஆரோக்கியராஜ் வீட்டுக்கு வந்தனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். உடனே வீட்டின் கதவை பூட்டி கொண்டு அங்கு சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆரோக்கியராஜ்.
இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தற்போது ஆரோக்கிய ராஜ் மதுராந்தகம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின்ராஜாசிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஆரோக்கியராஜ் வீட்டுக்கு வந்தனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். உடனே வீட்டின் கதவை பூட்டி கொண்டு அங்கு சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.