செய்திகள்
கொலையுண்ட ஒசாமா காதர், கைதான முகமது அலி

கடன் தகராறில் மைத்துனரை குத்தி கொன்ற வாலிபர்

Published On 2019-07-17 09:12 GMT   |   Update On 2019-07-17 09:12 GMT
தாம்பரம் அருகே கடன் தகராறில் மைத்துனரை குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் முகமது அலி (37). சிங்கப்பூரில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்தார். ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மாமியார் சையன்பு பொழிச்சலூர் பவானி நகரில் குடியிருக்கிறார். இவர் முகமது அலியிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை திரும்பதரவில்லை.

நேற்று இரவு முகமது அலி மாமியார் சையன்புவை சந்தித்தார். அப்போது கொடுத்த கடனை திரும்பி கேட்டார். இதனால் கடும் வாக்குவாதம் நடந்தது.

10 மணியளவில் முகமது அலியின் மைத்துனர் ஒசாமா காதர் அங்கு வந்தார். தாயாரிடம் கடன் பணத்தை கேட்டு தகராறு செய்ததை தட்டிக் கேட்டார்.

இதனால் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர்.

ஒசாமாகாதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

கத்திக் குத்தில் காயம் அடைந்த முகமது அலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக முகமது அலி கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News