செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே பைக் மீது வேன் மோதி மின் ஊழியர் பலி
ஜோலார்பேட்டை அருகே பைக் மீது மினிவேன் மோதிய விபத்தில் மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). மின் ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோடியூர் அருகே சென்ற போது எதிரே வந்த மினிவேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). மின் ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோடியூர் அருகே சென்ற போது எதிரே வந்த மினிவேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.