செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் பயணி கைது
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 வருடங்களாக வரதட்சணை வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்சாப் பயணி கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த விமான பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மகிழ்பூர் பகுதியை சேர்ந்த மக்கான்சிங் (32) என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் போலீசாரால் தேடப்படுகிற குற்றவாளி என தெரிய வந்தது.
அவரது மனைவி கொடுத்த வரதட்சணை புகாரில் கடந்த 2 வருடமாக அவரை போலீசார் தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்த மக்கான்சிங் சென்னை விமான நிலையத்தில் சிக்கி கொண்டார். அவரை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாநில போலீசார் சென்னை வருகிறார்கள். அவர்களிடம் அவரை ஒப்படைக்கின்றனர்.
மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த விமான பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மகிழ்பூர் பகுதியை சேர்ந்த மக்கான்சிங் (32) என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் போலீசாரால் தேடப்படுகிற குற்றவாளி என தெரிய வந்தது.
அவரது மனைவி கொடுத்த வரதட்சணை புகாரில் கடந்த 2 வருடமாக அவரை போலீசார் தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்த மக்கான்சிங் சென்னை விமான நிலையத்தில் சிக்கி கொண்டார். அவரை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாநில போலீசார் சென்னை வருகிறார்கள். அவர்களிடம் அவரை ஒப்படைக்கின்றனர்.