செய்திகள்

பொன்னமராவதி அருகே போலீஸ்காரர் மகன் மர்ம மரணம்

Published On 2019-06-07 14:39 GMT   |   Update On 2019-06-07 14:39 GMT
பொன்னமராவதி அருகே போலீஸ் ஏட்டு மகன் மர்ம முறையில் வாய்க்காலில் இறந்து கிடந்துள்ளார்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி பாரதிநகரை சேர்ந்தவர் ஆண்டி. இவர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கவியரசு(20). இவர் கடந்த ஆண்டு மே மாதம் இந்திய விமானப்படை காவலர் பணிக்கு தேர்வாகி மகாராஷ்டிரா மாநிலம் பெல்காமில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

மலையேறும் பயிற்சியில் தடுமாறி விழுந்து மும்பை விமானப்படை மருத்துத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சிகிச்சை அளிப்பதாக அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு கூட்டி வந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு கடந்த 4-ந் தேதி கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றார். 

மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடிப்பார்த்துள்ளனர். ஆனாலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் 5-ந் தேதி அதிகாலை பாரதிநகர் கிழக்கு பகுதியில் வையாபுரிப்பட்டி நரசினங் வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்த போது கவியரசு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த கவியரசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News