செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-06-06 18:05 GMT   |   Update On 2019-06-06 18:05 GMT
புதுக்கோட்டை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஆண்டி. இவரது மகன் கவியரசு (வயது 19). இவர் மும்பையில் உள்ள விமானப்படை விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது பயிற்சியில் தடுமாறி விழுந்ததில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பின்னர் கவியரசுக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பொன்னமராவதிக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கவியரசுவை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று வலையப்பட்டி மலையாண்டி கோவில் பின்புறம் பூச்சி மருந்தை குடித்து (விஷம்) கவியரசு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவியரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News