செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி விவசாயி பலி
ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியானார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயிப்பாளையம் கிராமம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆயிப்பாளையத்திற்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் உதயநத்தம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயிப்பாளையம் கிராமம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆயிப்பாளையத்திற்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் உதயநத்தம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.