செய்திகள்
தொண்டியில் கடலில் மூழ்கி மீனவர் பலி
தொண்டி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டி:
தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா (வயது61), மீனவர். இவர் கடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்று வலை விரித்து மீன் பிடிப்பது வழக்கம்.
நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற சாத்தையா காலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நம்புதாளையில் முருகன் கோவில் காலனி அருகே கடற்கரையில் ஆண் உடல் ஒதுங்கி கிடப்பதாக தொண்டி மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கரையில் ஒதுங்கிய உடல் சாத்தையா என தெரிய வந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தையாவுக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்களும் உள்ளனர்.
தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா (வயது61), மீனவர். இவர் கடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்று வலை விரித்து மீன் பிடிப்பது வழக்கம்.
நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற சாத்தையா காலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நம்புதாளையில் முருகன் கோவில் காலனி அருகே கடற்கரையில் ஆண் உடல் ஒதுங்கி கிடப்பதாக தொண்டி மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கரையில் ஒதுங்கிய உடல் சாத்தையா என தெரிய வந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தையாவுக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்களும் உள்ளனர்.