செய்திகள்

இரணியலில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2019-05-18 12:22 GMT   |   Update On 2019-05-18 12:22 GMT
இரணியலில் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கஞ்சா கும்பலையும் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திங்கள்நகர் சந்தை, இரணியல் சந்திப்பு ஆகிய இடங்களில் ரோந்து வரும்போது அங்கு சந்தேகப் படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் நெய்யூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 29), ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது இருவரும் பையில் தலா 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அய்யப்பன், ராஜேசை கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது யார்? எந்தெந்த இடங்களில் விற்பனை செய்தனர். யார், யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News