செய்திகள்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வி‌ஷம் குடித்து பைனான்சியர் தற்கொலை

Published On 2019-05-17 11:49 GMT   |   Update On 2019-05-17 11:49 GMT
கோவை ரத்தினபுரி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பைனான்சியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை ரத்தினபுரி அருகே உள்ள சம்பத் வீதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). இவர் அந்த பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்த தொழிலில் அனில்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்த அனில்குமார் தனது நண்பர்களை மது குடிக்க வருமாறு அழைத்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் ஜாலியாக மது குடித்து கொண்டு இருந்தனர். திடீரென அனில்குமார் நண்பர்களுக்கு தெரியாமல் மதுவுடன், வி‌ஷத்தை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அனில்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அனில்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News