செய்திகள்

மீனம்பாக்கத்தில் நெருக்கடியை குறைக்க தாம்பரத்தில் இருந்து சிறிய விமானங்கள் இயக்க முடிவு

Published On 2019-05-14 10:41 GMT   |   Update On 2019-05-14 10:41 GMT
மீனம்பாக்கத்தில் நெருக்கடியை குறைக்க தாம்பரத்தில் இருந்து சிறிய விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள் நாட்டு முனையம், வெளி நாட்டு முனையம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே 70 முதல் 80 பயணிகள் வரை பயணம் செய்யும் சிறிய விமானத்தை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய அத்தாரிட்டி அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பான ஆலோசனை முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடந்துள்ளது. இதுபற்றி இந்திய விமானப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

Tags:    

Similar News