செய்திகள்
பர்கூர் வனப்பகுதியில் குடற்புண் நோய் தாக்கி பெண் யானை பலி
அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் வனப்பகுதியில் குடற்புண் நோய் தாக்கி பெண் யானை பலியானது.
அந்தியூர்:
அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் வனப்பகுதியில் நேற்று பர்கூர் வன ரேஞ்சர் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது ஒரு பெண் யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது பற்றிய தகவல் கால்நடை மருத்துவர் அசோகனுக்கு தெரிவிக்கப்பட்டது.
கால்நடை டாக்டர் அந்த யானை உடலை பரிசோதித்த போது அந்த யானை குடற்புண் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானை தண்ணீர் மட்டும் அதிகம் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் தண்ணீர் இல்லாமல் சில இடங்களில் மட்டும் சேறும்-சகதியும் புழுக்கள் நிறைந்த தண்ணீரை அந்த யானை குடித்துள்ளது. இதனால் அந்த பெண் யானை புழுக்களால் தாக்கப்பட்டு பலியானது தெரியவந்தது. அந்த பெண் யானையின் வயது 24 ஆகும்.