செய்திகள்
திருப்பத்தூரில் நிலத்தகராறில் வக்கீலுக்கு வெட்டு- வாலிபர் கைது
திருப்பத்தூரில் நிலத்தகராறு பிரச்சனையில் வக்கீலை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் ராஜவேலு (வயது 30). இவரது தம்பி கதிர் வேலு (27) இருவரும் வக்கீல்கள்.
கிருஷ்ணனின் தம்பி முருகன் இவரது மகன் ராஜகோபால். இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை உள்ளது. இது சம்பந்தமான வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜவேலு வழக்கு சம்பந்தமாக சம்மனை சித்தப்பா முருகனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது மகன் ராஜகோபால் உள்பட 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்து கொண்டு ராஜவேலு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் மற்றும் அவரது உறவினர்கள் ராஜவேலு, மற்றும் கதிர்வேலுவை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக ராஜவேலு கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் ராஜவேலு (வயது 30). இவரது தம்பி கதிர் வேலு (27) இருவரும் வக்கீல்கள்.
கிருஷ்ணனின் தம்பி முருகன் இவரது மகன் ராஜகோபால். இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை உள்ளது. இது சம்பந்தமான வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜவேலு வழக்கு சம்பந்தமாக சம்மனை சித்தப்பா முருகனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது மகன் ராஜகோபால் உள்பட 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்து கொண்டு ராஜவேலு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் மற்றும் அவரது உறவினர்கள் ராஜவேலு, மற்றும் கதிர்வேலுவை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக ராஜவேலு கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.