செய்திகள்

வாலாஜா அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

Published On 2019-05-03 17:41 IST   |   Update On 2019-05-03 17:41:00 IST
வாலாஜா அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலாஜா:

வாலாஜா அருகே உள்ள கடப்பந்தாங்கல் காலனி நைனார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவருக்கும் முசிறி ரோடு வெற்றிலைகார தெருவை சேர்ந்த பத்மநாபன் (40), மற்றும் தென் கடப்பந்தாங்கலை சேர்ந்த சதீஸ்க்கும் தகராறின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே கடந்த மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது பத்மநாபன் மற்றும் சதீஷ், சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயத்துடன் இருந்த சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி அம்மு வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் எனது கணவருக்கு பத்மநாபன் மற்றும் சதீஷ் அகிய 2 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

பயத்தில் இருந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பத்மநாபன் மற்றும் சதீஷை தற்கொலைக்கு துண்டியதாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News