செய்திகள்

வேலூர் தோட்டபாளையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

Published On 2019-05-03 16:36 IST   |   Update On 2019-05-03 16:36:00 IST
வேலூர் தோட்டபாளையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் தோட்டப் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (26) ஏ.சி மெக்கானிக். இவரை நேற்று காலை கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த சுகுமார் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் ராம்குமார் (19). அமல்ராஜ் மகன் டேவிட் என்கிற ஜில்லு (19) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

சுகுமாருக்கும், ராம்குமார், டேவிட் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலருடன் சேர்த்து ராம்குமார், டேவிட் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளார்.

அதனை அறிந்த இருவரும் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடினர்.

சுகுமார் மீண்டும் தங்கள் இருவரையும் தாக்குவதற்க்கு முன்பு அவரை கொல்ல திட்டம் தீட்டி நேற்று இருவரும் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (18) உடந்தையாக இருந்துள்ளார். அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

Similar News