செய்திகள்

சோளிங்கர் அருகே பட்டாசு குடோன் வெடித்து சிறுவன் பலி

Published On 2019-04-30 17:29 GMT   |   Update On 2019-04-30 17:29 GMT
சோளிங்கர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் பலியானார்.
வாலாஜா:

சோளிங்கர் அருகே உள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது.

வாலாஜாவை சேர்ந்த சரவணன் (வயது 21), சதீஷ் (16) ஆகியோர் இன்று காலை அங்கு பணியில் இருந்தனர். அவர்கள் பட்டாசு பெட்டிகளை வேனில் இருந்து இறக்கி குடோனுக்குள் வைத்தனர்.

அப்போது பட்டாசுகள் உரசி திடீரென வெடித்தன. குடோன் முழுவதும், தீப்பொறி ஏற்பட்டு அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இதில் சரவணன், சதீஷ் இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களது உடலில் தீ பற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த விபத்தில் உடல் கருகிய சதீஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.

சரவணணை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News