செய்திகள்
கவுந்தப்பாடி அருகே பனைமரம் முறிந்து விழுந்து கல்லூரி பேராசிரியர் பலி
கவுந்தப்பாடி அருகே மழைக்கு ஒதுங்கியபோது பனைமரம் முறிந்து விழுந்து தனியார் கல்லூரி பேராசிரியர் பலியானார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.
கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 29). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் பேராசிரியர் கோவிந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்களின் பின்புறம் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார். அவரது நண்பர் சுரேஷ் வண்டியை ஓட்டி சென்றார்.
பெருந்தலையூர் அருகே உள்ள ஒரு ஏரி பக்கம் சென்றபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வண்டியை நிறுத்தி ஏரிக்கரையோரம் உள்ள ஒரு பனைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பலத்த காற்றில் பனைமரம் முறிந்து பேராசிரியர் கோவிந்தன் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் அக்கம்-பக்கத்தினர் அவரை உடனடியாக ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பேராசிரியர் கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.
கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 29). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் பேராசிரியர் கோவிந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்களின் பின்புறம் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார். அவரது நண்பர் சுரேஷ் வண்டியை ஓட்டி சென்றார்.
பெருந்தலையூர் அருகே உள்ள ஒரு ஏரி பக்கம் சென்றபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வண்டியை நிறுத்தி ஏரிக்கரையோரம் உள்ள ஒரு பனைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பலத்த காற்றில் பனைமரம் முறிந்து பேராசிரியர் கோவிந்தன் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் அக்கம்-பக்கத்தினர் அவரை உடனடியாக ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பேராசிரியர் கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.