செய்திகள்

கடையத்தில் தபால் ஊழியர் தற்கொலை

Published On 2019-04-29 17:02 GMT   |   Update On 2019-04-29 17:02 GMT
கடையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தபால் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:

கீழக்கடையத்தை சேர்ந்தவர் ஆதி(வயது55). இவர் அப்பகுதி தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வள்ளி. கடந்த 10 வருடமாக ஆதி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் குடும்பத்தோடு வசித்து வந்தார். 

இதனிடையே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 
Tags:    

Similar News