செய்திகள்

பழனி அருகே மதுபாரில் தகராறு செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2019-04-28 16:42 GMT   |   Update On 2019-04-28 16:42 GMT
பழனி அருகே தனியார் மதுபாரில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:

பழனி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 41). பழனி நகர அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.

கடந்த 15-ந்தேதி இவர் பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் மது பாருக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தார்.

இதுகுறித்து பார் நிர்வாகியான மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அடிவாரம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
Tags:    

Similar News