செய்திகள்

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி- 2 பேர் கைது

Published On 2019-04-27 17:27 IST   |   Update On 2019-04-27 17:27:00 IST
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் நேற்று மாலை நெல்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் இன்ஸ்பெக்டர் மனோகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்க முயன்றதாக கே.புதூர் போலீசில் மனோகரன் புகார்செய்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கே.புதூர், விஸ்வநாதன் நகரைச் சேர்வந்த கண்ணன் (வயது 39), கடச்சனேந்தல் ஜெயபால் (32) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News