செய்திகள்

புதுச்சேரி என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை

Published On 2019-04-17 10:21 GMT   |   Update On 2019-04-17 10:21 GMT
புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று நடைபெறும் சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
Tags:    

Similar News