செய்திகள்
அய்யர்பங்களா அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு
நடந்து வென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை:
மதுரை அய்யர் பங்களா கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சிவபாக்கியம் (வயது 65).
இவர் உச்சபரம்புமேடு பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் சிவபாக்கியத் தின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத் தில் தப்பிச் சென்று விட்ட னர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு என்.எஸ். கே. நகரைச் சேர்ந்த வர் சிவலிங்கம் (43) இவர் பாலிடெக்னிக் சாலையில் நடந்து சென்ற போது ஒரு வாலிபர் கத்திமுனையில் வழிமறித்து பணத்தை பறித்துச் சென்று விட்டார்.
இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.