செய்திகள்
வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலம் அருகே வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் வடிவேலு மனைவி நித்யா (வயது 34). இவர் சேலம் அருகே மின்னாம்பள்ளியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் வடிவேலு மனைவி நித்யா (வயது 34). இவர் சேலம் அருகே மின்னாம்பள்ளியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.