ஆறுமுகநேரியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். காட்டன்பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து சுமதி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடன் தொல்லைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமதி மற்றும் அவரது மகள் ஆகிய 2 பேரும் நேற்று விஷத்தை குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.