செய்திகள்
முதலியார்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி மாயம்
முதலியார்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் சர்மா. இவர் செங்கல்பட்டில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியங்கா (வயது 24). இவர் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பிரியங்கா வீட்டில் இருந்து ஜெராக்ஸ் எடுக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு பிரியங்கா வீடு திரும்பவில்லை. தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் பிரியங்கா இல்லை.
இதையடுத்து சுரேஷ் சர்மா தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி பிரியங்காவை தேடி வருகிறார்கள்.
முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் சர்மா. இவர் செங்கல்பட்டில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியங்கா (வயது 24). இவர் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பிரியங்கா வீட்டில் இருந்து ஜெராக்ஸ் எடுக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு பிரியங்கா வீடு திரும்பவில்லை. தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் பிரியங்கா இல்லை.
இதையடுத்து சுரேஷ் சர்மா தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி பிரியங்காவை தேடி வருகிறார்கள்.