செய்திகள்

அம்பத்தூர் தொகுதியில் கையில் மாம்பழத்துடன் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் ஓட்டுவேட்டை

Published On 2019-04-02 15:26 IST   |   Update On 2019-04-02 15:26:00 IST
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்பு மாம்பழம் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #PMK

தாம்பரம்:

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்பு மாம்பழம் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரித்தார்.

பாடி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் குறுகலான சாலைகளில் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பாமக துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் அம்பத்தூர் பகுதி செயலாளர் என். அய்யனார், எம்.டி.மைக்கேல்ராஜ்,கே.பி.முகுந்தன் உட்பட, பாஜக தேமுதிக தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட பகுதி வட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #PMK

Similar News