செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தகராறு செய்தவர் கைது

Published On 2019-03-26 10:47 GMT   |   Update On 2019-03-26 10:47 GMT
தேவதானப்பட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தகராறு செய்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேவதானப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் தேனி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிச்சை (60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பாண்டி வீட்டிற்கு வந்த பிச்சை அங்கிருந்த பாண்டியின் மனைவி லதாவிடம் தகராறு செய்தார். அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் லதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையை கைது செய்தனர்.

தேனி அருகில் உள்ள கோட்டூர் வீரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானபாண்டியன். இவரது மனைவி உதயராணி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் வீட்டில் பேசிக்கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த அம்பேத்கார் நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கும், உதயராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் இரும்பு கம்பியால் உதயராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News