செய்திகள்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Published On 2019-03-22 17:35 GMT   |   Update On 2019-03-22 17:35 GMT
காரிமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கொத்து மாரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (வயது65). இவர் முரசுப்பட்டி- பொம்ம அள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பார்வதி மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பார்வதி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News