செய்திகள்

வீராம்பட்டினத்தில் சோகம் உணவில் விஷம் கலந்து மகனை கொன்று தாயும் தற்கொலை

Published On 2019-03-15 17:22 GMT   |   Update On 2019-03-15 17:22 GMT
வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:

புதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு  3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிடையே  ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை  ஏற்பட்டு அடிக்கடி  தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள  முடிவு செய்தார்.  தான் இறந்து விட்டால்  மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி  மகனை கொன்று விட்டு  தானும் தற்கொலை  செய்து கொள்ள  எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்)  கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.

இதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன்  இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள். 

இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகிறார்.  இந்த சம்பவம்  வீராம்பட்டினம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News